புத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோயில் ஆடி செடல் திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.


குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோயில் ஆடி செடல் திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலில் ஆடி செடல் மற்றும் தேர்த் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், இரவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செடல் திருவிழாவில் திரளான பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மாநில தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் எம்எல்ஏ சொரத்தூர் ரா.ராஜேந்திரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com