மதுக் கடைகளுக்கு ஆக.15-இல் விடுமுறை

மதுபானக் கடைகளுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.


மதுபானக் கடைகளுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆகஸ்ட் 15-ஆம் தேதி (புதன்கிழமை) இந்திய சுதந்திர தினமானக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தன்று அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானம் அருந்தும் இடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள்,
ஆக.15-ஆம் தேதி அனைத்து மதுபான கடைகளும், மது அருந்தும் இடங்களும் திறக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஹோட்டல்களிலும் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com