கருணாநிதி மறைவுக்கு இரங்கல்: அனைத்துக் கட்சியினர் அமைதி ஊர்வலம்

திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி குறிஞ்சிப்பாடியில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவையொட்டி குறிஞ்சிப்பாடியில் திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சார்பில் அமைதி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 திமுக மாவட்டச் செயலரும், குறிஞ்சிப்பாடி தொகுதி எம்எல்ஏவுமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். குறிஞ்சிப்பாடி கடை வீதியில் உள்ள காந்தி சிலையிலிருந்து புறப்பட்ட அமைதி ஊர்வலம் ராஜவீதி, எல்லைக்கல் வழியாக பேருந்து நிலையத்தை அடைந்தது. அங்கு அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com