பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம்

சிதம்பரம் ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் பள்ளி வளாகத்தில், சிதம்பரம் தாலுகா காவல் சரகத்துக்குள்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம், காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்றது.

சிதம்பரம் ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் பள்ளி வளாகத்தில், சிதம்பரம் தாலுகா காவல் சரகத்துக்குள்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் (படம்), காவல் ஆய்வாளர் அம்பேத்கர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி வாகன ஓட்டுநர்கள் பங்கேற்றனர். பள்ளி வாகனத்தை ஓட்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு நெறிகள், விபத்தில்லாமல் பயணம் செய்வது குறித்த ஆலோசனைகளை ஆய்வாளர் அம்பேத்கர் ஓட்டுநர்களுக்கு வழங்கினார். 
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் விஸ்வநாதன், செயலர் ஹரிகிருஷ்ணன், பள்ளி முதல்வர் லட்சுமணன், உதவி ஆய்வாளர் ராஜமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com