கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் புதன்கிழமை (ஆக. 29) தொடங்கப்படும் என பதிவாளர் கே.ஆறுமுகம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான பி.இ. படிப்பு, பி.இ. பகுதி நேரப் படிப்பு, டி. ஃபார்ம், பி.ஃபார்ம், ஃபார்ம். டி, டிப்ளமோ இன் மைன்ஸ் அண்டு பி.வொக்கேஷன்ஆகிய படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வருகிற புதன்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.