சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியைச் சேர்ந்த செல்வராஜ் செட்டியார் சனிக்கிழமை காலமானார். இவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்த தானக் கழகம், அரிமா சங்கம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதற்கான ஏற்பாடுகளை ரத்த தானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், ஸ்ரீமுஷ்ணம் அரிமா சங்க நிர்வாகிகள் ஜவகர் நாராயணசாமி, வேல்முருகன், வாசவி கிளப் நிர்வாகி கோபிநாத் ஆகியோர் செய்தனர்.