திட்டக்குடி அருகே கள்ளச் சாராய வியாபாரியை போலீஸார் கைதுசெய்தனர்.
திட்டக்குடி அருகே உள்ள கொரக்கைவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால் (42). இவர் அந்தக் கிராமத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்வதாக ராமநத்தம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்ற போலீஸார், அங்கு கள்ளசாராயம் விற்றுகொண்டிருந்த ஜெயபாலை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 240 லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.