புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகள் கடத்தியதாக இருவரை பண்ருட்டி போக்குவரத்து பிரிவு போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பண்ருட்டி, நான்குமுனைச் சந்திப்பில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பரமேஸ்வர பத்மநாபன் தலைமையில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை மறித்து சோதனையிட்டனர். அதில் புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகள் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து, பைக்கை ஓட்டி வந்த ஜித்தன்,
அவரது நண்பர் பெரியசாமி ஆகியோரை பிடித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைதுசெய்து, அவர்களிடம் இருந்து
61 மதுப் புட்டிகள், பைக்கை பறிமுதல் செய்தனர்.