மூதாட்டியிடம் நகை பறிப்பு

சிதம்பரம் அருகே மூதாட்டியிடம் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.


சிதம்பரம் அருகே மூதாட்டியிடம் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் சனிக்கிழமை பறித்துச் சென்றனர்.
சிதம்பரம் அருகே வல்லம்படுகை பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மனைவி சுந்தராம்பாள் (65). இவர் அந்தப் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சனிக்கிழமை காலை சுந்தராம்பாள் வழக்கம்போல கடையிலிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர், கடையில் சிகரெட் கேட்டுள்ளனர். அந்தப் பொருளை எடுக்க சுந்தராம்பாள் திரும்பியபோது, மர்ம நபர்கள் அவரது கழுத்திலிருந்த மூன்றரை பவுன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com