சிதம்பரத்தில் நாட்டியாஞ்ச விழா தொடங்கியது

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. 

மகா சிவராத்திரியை முன்னிட்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பொது தீட்சிதர்களின் தில்லை நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது.
 தொடர்ந்து 17-ஆம் தேதி வரை 5 நாள்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.
 நிகழ்ச்சிக்கு டி.சுப்பிரமணிய தீட்சிதர் தலைமை வகித்தார். சிவநெறி தி.பொன்னம்பலம் சிறப்புரையாற்றினார்.
 சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பத்மா சுப்பிரமணியன், ஜெயப்பிரியா விக்ரமன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
 தொடக்க விழாவை அடுத்து டாக்டர் பத்மா சுப்பிரமணியன் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
 நாட்டியமாடிய கலைஞர்கள்: துபாய் சருதி கிருஷ்ணமூர்த்தி பரதம், சென்னை கலா மண்டலம் ஸ்ருதி ஷோபி, ராமநாதபுரம் அபிநய நாட்டியாஞ்சலி நுண்கலைப் பள்ளி மாணவிகளின் பரதம், பெங்களூர் எம்.நாட்டியாலயா மாணவிகள், சென்னை ஸ்ரீமதி துவாகிதா விஸ்வநாதா, பெங்களூர் ஸ்பூர்த்தி நாட்டியப் பள்ளி, சென்னை ஸ்ரீகலாக்ஷி பரதப் பள்ளி, அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை மாணவ, மாணவிகள், துபாய் நிருத்ய புவனம் மாணவிகள் ஆகியோரின் பரதம், சின்னமனூர் ஏ.சித்ரா பரதம், சென்னை ஜெயப்பிரியா விக்ரமன்-குச்சுப்புடி, விழுப்புரம் இ.எஸ்.மியுசிக் அகாதெமி மாணவிகளின் பரதம், தென்னாப்பிரிக்கா நாட்டிய ஆனந்தபைன் ஆர்ட்ஸ் மாணவிகள், மும்பை ராஜராஜேஸ்வரி கலா மந்திர் மாணவிகள், கரூர் கூத்தம்பலம் நுண்கலை அகாதெமி மாணவிகள், பெங்களூர் சம்யுக்தா சங்கர் பரதம், நெய்வேலி நடராஜ நாட்டிய கலாகேந்திரா மாணவிகள் பரதம், மும்பை பரதநாட்டிய கலாலயா மாணவிகள், சிங்கப்பூர் கல்பி விருக்க்ஷô பைன் ஆர்ட்ஸ் மாணவர்கள், கர்நாடகா மயூர் நாட்டியாலா கேந்திரா மாணவிகள், ஹைதராபாத் மஹதி கலா சமிதி மாணவிகள், பெங்களூர் பெனாக நாட்டிய மந்திர் மாணவிகள், தாம்பரம் ஹரி அபிநய கிருஷ்ணா இசைப் பள்ளி மாணவிகள், திண்டிவனம் விஜயன் கலைக்கூட மாணவிகள், சென்னை பூர்ணா பரமேஷ்வரன், பெங்களூர் பதான்யாஸ் பரத பள்ளி மாணவிகள், நெய்வேலி பத்மபிரியா ஆகியோரின் பரதம்.
 நாட்டியாஞ்சலி மாலை 4 மணிக்குத் தொடங்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது.
 விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் எஸ்.ராஜகணபதி தீட்சிதர், தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் தலைவர் எஸ்.வி.நவமணி தீட்சிதர், துணைத் தலைவர் எஸ்.சிவசங்கர தீட்சிதர், பொருளாளர் ஜெய.நடராஜமூர்த்தி தீட்சிதர், நிர்வாகிகள் ஆனந்த தாண்டவ தீட்சிதர், ஜே.சிவச்செல்வ தீட்சிதர், ஹோம.விஜயபால தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர்.
 சிதம்பரம் நாட்டியாஞ்சலி
 அறக்கட்டளை சார்பில்...: சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், தெற்கு வீதி வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் 37-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கியது.
 தொடர்ந்து 5 நாள்கள் நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.
 தொடக்க விழாவுக்கு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ஆர்.முத்துக்குமரன் தலைமை வகித்தார். செயலாளர் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம் வரவேற்றார். சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குநர் என்.காமகோடி தொடக்கி வைத்துப் பேசினார்.
 நாட்டியாஞ்சலியில் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்று நாட்டியமாடுகின்றனர்.
 தினமும் மாலை 6 மணி முதல் தொடங்கி இரவு 10 மணி வரை நாட்டியாஞ்சலி நடைபெறுகிறது.
 நாட்டியமாடிய கலைஞர்கள்:
 புதுதில்லி கிருஷ்ணமூர்த்தி குழுவினர், ஹூப்ளி சுஜாதா நாட்டியப் பள்ளி மாணவ, மாணவிகள், சென்னை கவிதா ராமு ஆகியோரின் பரதம், சென்னை மீரா கிருஷ்ணமூர்த்தி குழுவினரின் குமார சம்பவம் நாட்டிய நாடகம், புணே நாத்ரூப் நாட்டியப் பள்ளி மாணவிகளின் கதக் நடனம், யுஎஸ்ஏ சலங்கை நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம், ஹைதராபாத் டாக்டர் விஜயபால் பாத்லோத் குழுவினர் குச்சுப்புடி நடனம், புதுதில்லி கருர்காம் சுனர்தகி நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம், பெங்களூரு அபூர்வா பிரதீப் பரதம், சென்னை சரஸ்வதி நாட்டியாலயா சப்த தாண்டவம், மந்திர் நாட்டியகலா கருகுலா மாணவிகளின் மோக்க்ஷம் நடனம் நடைபெற்றது.
 விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவர் ஆர்.முத்துக்குமரன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், ஆர்.ராமநாதன், செயலாளர்கள் ஆர்.நாகசுவாமி, ஏ.சம்பந்தம், இணைச் செயலாளர் எம்.கணபதி, பொருளாளர் ஆர்.சக்தி நடராஜன், உறுப்பினர்கள் ஏ.கே.நடராஜன், ஆர்.கே.கணபதி, ஆர்.சபாநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com