கடலூரில் பள்ளிக்கூட அறையில் வைக்கப்பட்டிருந்த 69 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் சி.முத்துக்குமார் (55). சிவலிங்கம் தெருவில் பள்ளி நடத்தி வருகிறார். பள்ளியில் அவருக்கான அறையில் சுவற்றில் மரத்திலான சிறிய அறை அமைத்துள்ளார். அதில், 69 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தாராம். சில நாள்களுக்கு முன்பு அந்த அறையை பார்த்தபோது அதிலிருந்த நகைகளைக் காணவில்லையாம்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், கடலூர் முதுநகர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன நகையின் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.