திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்ட எஸ்பி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் காணாமல்போன குழந்தையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் மீட்டார்.
திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்ட எஸ்பி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் காணாமல்போன குழந்தையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார் மீட்டார்.

இந்தக் கோயிலில் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவில், சிதம்பரம் அருகே உள்ள அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் குழந்தை காணாமல்போனது.

இதையறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார், சக போலீஸாரின் உதவியுடன் கோயில் வளாகத்தில் சுற்றித்திரிந்த அந்தப் பெண் குழந்தையை மீட்டார். பிறகு குழந்தையை அவரது தாயாரிடம் ஒப்படைத்தார். எஸ்பிக்கு குழந்தையின் தாய் நன்றி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com