ஜனவரி 24-இல் மகளிர் திட்ட பொருள்கள் கண்காட்சி

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பொருள்கள் கண்காட்சி கடலூரில் வருகிற 24 - ஆம் தேதி நடைபெறுகிறது.

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பொருள்கள் கண்காட்சி கடலூரில் வருகிற 24 - ஆம் தேதி நடைபெறுகிறது.
தமிழக அரசு மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பாக, மகளிர் முன்னேற்றத்துக்காகவும், நிலைத்த நீடித்த வாழ்வாதாரத்துக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருள்களை விற்பனை செய்வதற்காகவும், அவர்களால் தாயாரிக்கப்படும் தரமான பொருள்களை அடையாளபடுத்தும் விதமாகவும் மாவட்ட பொருள்காட்சி நடத்தப்படுகிறது.
இந்தப் பொருள்காட்சி கடலூரில் நெல்லிக்குப்பம் சாலையில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே உள்ள பூமாலை வணிக வளாகத்தில் ஜனவரி 24 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 4 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பொருள்காட்சியில் கடலூர் மாவட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது தயாரிப்புப் பொருள்களுடன் கலந்து கொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com