சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக நாட்டு நலப் பணித் திட்டம் அங்கம்: 36, உளவியல் துறை மாணவர்களுக்கான திறன் ஆய்வுப் பயிலரங்கம் லிப்ரா அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதன் நோக்கம் மாணவர்களின் திறனை ஆராய்தல் ஆகும். இதில், 150 மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் இருந்து பங்கேற்று பயன் பெற்றனர்.
நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் வரவேற்றார். துணைவேந்தர் எஸ்.மணியன் விழாவைத் தொடக்கி வைத்துப் பேசினார். கல்வியல் புல முதல்வர் ஆர்.பாபு தலைமை வகித்து பேசினார். உளவியல் துறை முன்னாள் தலைவர் வி.சுரேஷ் வாழ்த்துரைத்தார். பயிலரங்கத் திட்ட அலுவலர் ஆர்.நீலகண்டன் நன்றி கூறினார்.
இதில், உளவியியல் துறை நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களால் பிற துறை மாணவர்களுக்கு திறன் ஆய்வு செய்யப்பட்டது. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுதல் குறித்து மாணவர்களுக்கு பேச்சாளர் சிவகுமார் விளக்கினார்.