ஜன.19-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 19-ஆம் தேதி கடலூரில் நடைபெறுகிறது.

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 19-ஆம் தேதி கடலூரில் நடைபெறுகிறது.
 இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் வருகிற 19-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
 காலை 10.30 மணி முதல் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும்.
 எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், இந்தக் கூட்டத்தில் கோரிக்கைகள் தொடர்பாக அளிக்கப்படும் புகார்களுக்கு அடுத்தக் கூட்டத்தில் பதில் அளிக்கப்படும்.
 பேச வாய்ப்பு கிடைக்காதவர்கள் மனுக்கள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கூட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆட்சியர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com