கடலூர் தேவனாம்பட்டினத்திலுள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்புப் பயிற்சிக்கான திறன் அடிப்படையிலான பயிற்சி வகுப்பு அண்மையில் நடைபெற்றது.
சென்னையிலுள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமில் 250 மாணவர்கள் பங்கேற்றனர். முகாமிற்கு, கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்தார். சார்-ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களை வாழ்த்திப் பேசினார்.
இயற்பியல் துறைத் தலைவர் அன்பரசி, தூய்மை பாரத இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரா.ச.வேலுமணி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் சைமன்ஜோஸ்வா, அர்ச்சனா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.