மின்சாரம் பாய்ந்ததில் பாதிக்கப்பட்ட கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கடலூர் அருகே உள்ள கோண்டூர் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்தவர் பெ.சுந்தரம் (43). கட்டடத் தொழிலாளி. இவர், கடந்த 10-ஆம் தேதி அதேப் பகுதியில் புதிய வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது கை வீட்டின் மேல்பகுதியில் சென்ற உயரழுத்த மின்கம்பியில் பட்டுள்ளது. இதில், மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டவர் பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.