சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மேலாண்மைத் துறையில் பொங்கல் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழக மேலாண்மைத் துறை மாணவர்கள் பொங்கலிட்டு படைத்து, விழாவைக் கொண்டாடினர்.
தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செ. மணியன், பதிவாளர் கே.ஆறுமுகம், மொழிப் புல முதல்வர் வி.திருவள்ளுவன், துறைத் தலைவர் சி.சமுத்ரராஜ்குமார், பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.