கடலூர் உள்ளிட்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கடலூரில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. அதே நேரத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி உள்பட சுற்றுவட்டாரக் கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் அந்தப் பகுதியில் நெல், பயறு வகைப் பயிர்களை நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.