பண்ருட்டி தொகுதிக்குள்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு ரூ.17 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்களை எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் அண்மையில் வழங்கினார்.
இதற்கான விழா பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு, பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அதிமுக மாவட்ட பொருளாளர் ஜனகிராமன், நெல்லிக்குப்பம் நகரச் செயலர் செüந்தர், பண்ருட்டி நகர அவைத் தலைவர் ராஜதுரை, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் சுந்தரிமுருகன், கெüரிபாண்டியன், தொரப்பாடி பேரூராட்சி முன்னாள் தலைவர் வள்ளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பங்கேற்ற எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் பண்ருட்டி, அண்ணாகிராமம், நெல்லிக்குப்பம், தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்த 50 விளையாட்டுக் குழுக்களுக்கு ரூ.17 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.