ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயிற்சி மையம் தொடங்க தனியார்கள் முன்வர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி மையம் கொடங்க தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2018-19 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சரால் இது சிறப்புத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.
எனவே, இந்தத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஜூலை 14 -ஆம் தேதிக்குள் "மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல தரைதளம், கடலூர்' என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.