கடலூர் சார்- ஆட்சியர் பொறுப்பேற்பு

கடலூர் சார் -ஆட்சியராக கே.எம்.சரயு (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றார்.

கடலூர் சார் -ஆட்சியராக கே.எம்.சரயு (படம்) புதன்கிழமை பொறுப்பேற்றார்.
 புதுக்கோட்டை சார் -ஆட்சியராக பதவி வகித்து இவர், பணியிட மாறுதலில் இப்பொறுப்பை ஏற்றுள்ளார். கடந்த 2015 -ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணிக்குத் தேர்வான இவர், விழுப்புரத்தில் பயிற்சி ஆட்சியராகவும், பின்னர் மத்திய அரசின் மத்திய நிதி அமைச்சகத்தில் உதவிச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்.
 கடலூர் சார்- ஆட்சியராகப் பணியாற்றி வந்த ஜானிடாம் வர்கீஸ் மீன்வளத் துறைக் கூடுதல் இயக்குநராக ராமநாதபுரத்துக்குப் பணியிட மாறுதலில் சென்றதால், கே.எம்.சரயு கடலூர் சார்-ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.
 பின்னர், கே.எம்.சரயு செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை அவரவர் பகுதிகளுக்கே சென்று விசாரித்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள் தங்களது குறைகளை 94450 00426 என்ற செல்லிடப்பேசி எண்ணில் கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலமாகவும் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com