சென்னை அருங்காட்சியகங்களின் உதவி இயக்குநரின் உத்தரவுப்படி, அருங்காட்சியகத் துறை சார்பில் பேருந்தில் அருங்காட்சியகக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியைப் பள்ளி மாணவ, மாணவிகள் இலவசமாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகக் கண்காட்சிப் பேருந்து பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று வருகிறது.
எனவே, இதைப் பார்வையிட விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் வருகிற 13- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரைக் காணலாம் என கடலூர் காப்பாட்சியர் செ.ஜெயரத்னா தெரிவித்தார்.