பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் ஆனி மாத அமாவாசையையொட்டி வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத அமாவாசையையொட்டி மூலவர் சரநாராயணப் பெருமாள் ஸ்ரீதன்வந்திரி என்கிற வைத்திய நாராயணனாகவும், உற்சவர் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்திலும் காட்சியளித்தனர். திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.