டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 விழாவுக்கு சென்ற ஆண்டு தலைவர் பி.ஆனந்தராமன் தலைமை வகித்தார். சென்ற ஆண்டு செயலர் ஆர்.கல்யாணராமன் வரவேற்றார். இந்த ஆண்டுக்கான புதிய தலைவராக எஸ்.திருஞானசம்பந்தம், செயலராக எம்.சீனுவாசன், பொருளாளராக எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் பொறுப்பேற்றனர். ரோட்டரி மண்டல துணை ஆளுநர் எஸ்.நடனசபாபதி புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தார்.
 விழாவில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் ஆர்.கேதார்நாதன், எஸ்.அருள்மொழிச்செல்வன் ஆகியோர் பங்கேற்று ஏழைகளுக்கு தையல் இயந்திரம், இஸ்திரிப் பெட்டி, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினர்.
 விழாவில் சாசன தலைவர் பி.தொல்காப்பியன், சுதாகர், சுனில்குமார், சபேசன், சரவணன், லிங்க கணேசன், ஜான்கிருஷ்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சங்கச் செயலர் எம்.சீனுவாசன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com