தமிழ்த்திறன் போட்டி: அரசுக் கல்லூரி சிறப்பிடம்

தமிழ்நாட்டுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதன் 50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையால் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான

தமிழ்நாட்டுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டதன் 50-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையால் மாவட்ட அளவில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தமிழ்த்திறன் போட்டிகள் கடலூரில் அண்மையில் நடத்தப்பட்டன.
 இந்தப் போட்டிகளில் பங்கேற்ற கடலூர் தேவனாம்பட்டினம் அரசுப் பெரியார் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனர். கவிதைப் போட்டியில் டே.சிவரஞ்சனி, பேச்சுப் போட்டியில் பா.விஜய், கட்டுரைப் போட்டியில் கோ.பிரித்தி ஆகியோர் சிறப்பிடம் பெற்று பரிசுகளை வென்றனர். போட்டிகளில் வென்றவர்களை கல்லூரி முதல்வர் பி.ஆர்.ராஜகுமார், தமிழ்த் துறைத் தலைவர் ப.குமரன், பேராசிரியர்கள் ந.பாஸ்கரன், வி.பன்னீர்செல்வம் ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com