"மின்வாரிய ஊழியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது'

கடலூர் மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்களை இடமாற்றம் செய்யக் கூடாதென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் மின்வாரிய ஊழியர்களை இடமாற்றம் செய்யக் கூடாதென தமிழ்நாடு மின்ஊழியர்கள் ஜனநாயக முன்னணி வலியுறுத்தியது.
 இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஸ்ரீதர் வெளியிட்ட அறிக்கை: மின்சார வாரியத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பிரிவில் பணிபுரியும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், முகவர், மின்பாதை ஆய்வாளர், வணிக ஆய்வாளர், வணிக உதவியாளர், கணக்கீடு மற்றும் வருவாய் பிரிவுகளில் பணியாற்றுவோரை இடம் மாற்றம் செய்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு ஜனநாயக முன்னணி கண்டனம் தெரிவிக்கிறது.
 இதுகுறித்து தொழில்சங்கங்களுடன் ஆலோசித்து அதனடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளை செயல்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com