சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசனம்

வடலூர் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வடலூர் சத்திய ஞான சபையில் ஆனி மாத ஜோதி தரிசன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, ஆனி மாத பூச நட்சத்திரத்தையொட்டி வெள்ளிக்கிழமை காலை தரும சாலையில் திருஅருள்பா முற்றோதல், அகவல் பாடப்பட்டது.
 தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஞான சபையில் சிறப்பு பூஜை செய்து ஜோதி தரிசனம் நடைபெற்றது. பின்னர், இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை 6 திரைகளை நீக்கி சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது. வடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சன்மார்க்க அன்பர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com