என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளி மாயம்

வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளியை காணவில்லை என அவரது மனைவி முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளியை காணவில்லை என அவரது மனைவி முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 பண்ருட்டி ஒன்றியம், சொரத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் கனகசபை மகன் கலைச்செல்வன் (30). இவர், என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
 இந்த நிலையில், கடந்த மே 26-ஆம் தேதி வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுநாள் வரையில் வீடு திரும்பவில்லையாம். எங்கு தேடியும் கிடைக்கவில்லை என அவரது மனைவி ராஜகுமாரி முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com