தண்ணீர் நிறுவனத்தை எதிர்த்தவருக்கு மிரட்டல்

தனியார் தண்ணீர் நிறுவனத்தை எதிர்த்தவருக்கு வந்த மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.

தனியார் தண்ணீர் நிறுவனத்தை எதிர்த்தவருக்கு வந்த மிரட்டல் தொடர்பாக போலீஸார் விசாரிக்கின்றனர்.
 கடலூர் அருகே உள்ள சிங்கிரிகுடியில் தனியார் தண்ணீர் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் ஆழ்துளை குழாய் மூலம் தண்ணீர் எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என அந்தப் பகுதியைச் சேர்ந்த குருநாதன் உள்ளிட்ட சிலர் தண்ணீர் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ம.சிவராமன், மு.சக்திவேல் (எ) பெரியாண்டவன், ரா.ரீகன், செ.சாந்தகுமார், அ.மணிகண்டன், பா.பலராமன் ஆகியோர் தண்ணீர் நிறுவனத்துக்கு ஆதரவாக குருநாதன் வீட்டுக்குச் சென்று அவரை மிரட்டினராம்.
 இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி காவல் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com