பண்ருட்டி, திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோயிலில் வைகாசி மாத அமாவாசை சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி, திருவதிகையில் புகழ்பெற்ற ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவர் சரநாராயண பெருமாள் சந்தனக் காப்பு அலங்காரத்திலும், உற்சவர் திருக்கண்ணாடி அறையில் புஷ்ப அலங்காரத்தில் உபய நாச்சியார்களுடன் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார். வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.