சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசுக் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான மூன்றாம் கட்ட கலந்தாய்வு வருகிற 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தக் கல்லூரியில் 2018-19-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு இளநிலை படிப்புகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட கந்தாய்வு நிறைவுபெற்றது. இந்த நிலையில் அனைத்துத் துறைகளிலும் மீதமுள்ள குறைந்தபட்ச இடங்களுக்கு மூன்றாம் கட்ட அனுமதி சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் சே.மீனா தெரிவித்துள்ளார்.