கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக சிதம்பரத்தைச் சேர்ந்த ஏ.ஜாபர்அலி நியமிக்கப்பட்டார்.
இவரை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கடலூர் மாவட்ட திமுக செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிதம்பரம் நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் ஆகியோர் பரிந்துரையின் பேரில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமித்து அதற்கான உத்தரவு பிறப்பித்தார். ஏ.ஜாபர்அலி, சிதம்பரம் நகர திமுக பொருளாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.