கடலூர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புவனகிரி, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் சட்டப் பேரவைத் தொகுதிகளில் மாவட்டச் செயலர் கே.எஸ்.கே.பாலமுருகன் தலைமையில் நிலவேம்புக் குடிநீர் புதன்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றியச் செயலர்கள் அன்பழகன், விவேகானந்தன், ரத்தினசபாபதி, அப்பாதுரை, செல்வராஜ், அக்ரி.முருகேசன், முருகன், பேரூராட்சி செயலர் தர்ம.கர்ணன், கோகுலகிருஷ்ணன், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் நாராயணமூர்த்தி, பேரவைச் செயலர் சுந்தரமூர்த்தி, மகளிரணி லதா மங்கேஷ்கர் சண்முகசுந்தரம், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலர் ராமதாஸ், இலக்கிய அணி தலையரசன், பொதுக்குழு உறுப்பினர் பி.பாண்டியன், வழக்குரைஞர் பீமாராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.