கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

சாலையைச் சீரமைக்கக் கோரி, நந்திமங்களம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சாலையைச் சீரமைக்கக் கோரி, நந்திமங்களம் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பெண்ணாடம் அருகே நந்திமங்களம் கிராமத்திலுள்ள சாலைகள் தொடர் மழையால் மோசமாக சேதமடைந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். மேலும், கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கும் தீர்வு காணப்படவில்லையாம். இதைக் கண்டித்து, கிராம மக்கள் வெள்ளிக்கிழமை திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com