விருத்தாசலத்தில் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்புப் பகுதியில் வீடுகளுக்கு சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை கண்டிப்பதாகக் கூறி, எஸ்.ஆர்.எம்.யூ. தொழில் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். செயலர் செல்வம் முன்னிலை வகித்தார். திருச்சி கோட்ட செயல் தலைவர் பழனிவேல் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், சுகாதாரமான குடிநீர் வழங்கக் கோரியும், ரயில்வே மருத்துவமனையில் பெண் செவிலியர்களை நியமிக்கக் கோரியும் முழக்கமிட்டனர். நிர்வாகிகள் வீரக்குமார், சந்திரசேகர், ராஜேந்திரன், சிலம்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.