கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
சங்கச் செயலர் சிலம்பரசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் திரளானோர் கலந்துகொண்டு, நெல்லையில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com