கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டக்குடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்காத வகையில் மேம்பாடு செய்ய வேண்டும். திட்டக்குடி ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான திருக்குளத்தில் வடக்குப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். அரசு கலைக் கல்லூரிக்கு தனியாக சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகர செயலர் கெளதமன் தலைமை வகித்தார்.
மங்களுர் ஒன்றிய இணைச் செயலர் பி.முருகானந்தம், ஒன்றிய பொருளாளர் க.பாரதவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் கருப்புசாமி கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோ.குணத்தொகையன், இடைச்செருவாய் கணேசன், வழக்குரைஞர் அம்பேத்கர், க.ராமகிருஷ்ணன், ஜான்செங்குட்டுவன், பழனிவேல், வீரமணி, சு.சங்கர், ஹென்சன்பிரபு, ஆவட்டி ரவி, காசி.கணேசன், இளையராஜா, சண்முகம், இளமங்கலம் பிரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர இணைச் செயலர் முருகையன் நன்றி கூறினார்.