பள்ளியில் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்

ஊதிய உயர்வு வழங்கக் கோரி, நெய்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு சாப்பிடாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 

ஊதிய உயர்வு வழங்கக் கோரி, நெய்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு சாப்பிடாமல் உள்ளிருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். 
 நெய்வேலி, வட்டம் 4-இல் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 100 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லையாம். 
 இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பள்ளி ஆசிரியர்கள் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து மாணவர்களுக்கு வகுப்பு நடத்தினர். 
மேலும், மதிய உணவை மறுத்து தங்களது பணியை தொடர்ந்தனர். பின்னர், மாலையில் பள்ளயில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com