பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் கிராமத்தில், புதுப்பேட்டை காவல் நிலையம் சார்பில் சாலைப் பாதுகாப்பு, விபத்து தடுப்பு பிரசார விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, புதுப்பேட்டை காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும், செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனத்தை இயக்கக் கூடாது. இருசக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். மது போதையில் வாகனம் ஓட்டக் கூடாது. வாகனம் இயக்கும்போது உரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஒறையூர் கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.