என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் திட்ட மாணவர்கள் சார்பில் பார்வதிபுரத்தில் சிறப்பு என்எஸ்எஸ் முகாம் அண்மையில்  நடைபெற்றது.

வடலூர், புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் திட்ட மாணவர்கள் சார்பில் பார்வதிபுரத்தில் சிறப்பு என்எஸ்எஸ் முகாம் அண்மையில்  நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ரா.திருமுருகன் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார். முகாமில், தரும சாலை, சத்திய ஞான சபை, கல்பட்டு ஐயா நினைவிடம்,  மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.  இந்த முகாமில் ஆயுர்வேத மருத்துவர் ஜீவா ஆனந்த், உறவற்ற 100  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.  
மேலும், டெங்கு தடுப்பு விழிப்புணர்வு, திறந்தவெளி கழிப்பிடத்தின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பேரணியும் நடை
பெற்றது. 
உதவி தலைமை ஆசிரியர் மதியழகன், முதுகலை ஆசிரியர் செல்வமணி, கணினி ஆசிரியர் சதீஷ் ஆகியோர் முகாமுக்கான உதவிகளை செய்தனர். திட்ட அலுவலர் ரா.சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com