இந்தியன் வங்கி சிறப்பு கடனுதவி முகாம்

கடலூரில் இந்தியன் வங்கி சார்பில் வீடு, வாகனக் கடன் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடலூரில் இந்தியன் வங்கி சார்பில் வீடு, வாகனக் கடன் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இந்தியன் வங்கியின் கடலூர் மண்டலம் சார்பில், மண்டலம் முழுவதிலும் உள்ள கிளைகளில் சிறப்பு கடன் முகாம் நடைபெற்றது. அதன்படி, கடலூர் பிரதான கிளை சார்பில் நடைபெற்ற முகாமில் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு முகாமை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பிரதான கிளை மேலாளர் ராஜாராமன் வரவேற்றார். கிளை மேலாளர்கள் மோகன், சாமிநாதன், விகிர்தீஸ்வரன், நந்தகுமார், ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பாரதிராஜா, வெங்கட் , ரமேஷ் ரெட்டி, சிவராஜ், ஆன்டோ ரெனிஸ் செய்திருந்தனர்.
 முகாமில் சுமார் ரூ.4 கோடிக்கான கடன் அனுமதி கடிதங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. சிறப்பு கடன் முகாமில் விழாக்கால சலுகையாக வீடு மற்றும் வாகனக் கடனுக்கு பரிசீலனைக் கட்டணம் இல்லை எனவும், இந்தச் சலுகை டிச.31 வரை அமலில் இருக்கும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com