சிதம்பரம் அருகே கே.ஆடுர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவர் சபா நடேசன் தலைமை வகித்துப் பேசினார். துணைத் தலைவர் ராமமூர்த்தி, இயக்குநர்கள் புருஷோத்தமன், கல்யாணசுந்தரம், ரவிச்சந்திரன், தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கூட்டுறவு கடன் சங்கம் மூலம் விவசாயிகளுக்கு நிகழாண்டில் பயிர்க் கடன் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் செயலர் ஞானசேகரன் மற்றும் சங்கப் பணியாளர்கள் பங்கேற்றனர்.