சாராயம் கடத்தியவர் கைது

ஆட்டோவில் சாராயம் கடத்திய புதுவை இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

ஆட்டோவில் சாராயம் கடத்திய புதுவை இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
கடலூர் ஆல்பேட்டையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவில் சாராயம் கடத்தப்பட்டதை காவலர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, 8 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 200 லிட்டர் சாராயத்தையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.   இதுதொடர்பாக, ஆட்டோவை ஓட்டி வந்த புதுவை மாநிலம், குருவிநத்தத்தைச் சேர்ந்த மணிமாறன் மகன் சூரியராஜ் (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com