ஆட்டோவில் சாராயம் கடத்திய புதுவை இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.
கடலூர் ஆல்பேட்டையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவில் சாராயம் கடத்தப்பட்டதை காவலர்கள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, 8 மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட 200 லிட்டர் சாராயத்தையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ஆட்டோவை ஓட்டி வந்த புதுவை மாநிலம், குருவிநத்தத்தைச் சேர்ந்த மணிமாறன் மகன் சூரியராஜ் (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.