பாரதியார் நினைவு தினம்

மகாகவி பாரதி நினைவு தினம் கடலூரில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 

மகாகவி பாரதி நினைவு தினம் கடலூரில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
கடலூர் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சார்பில் நடைபெற்ற பாரதி நினைவு அஞ்சலி கூட்டத்துக்கு மன்றத் தலைவர் கடல்.நாகராஜன் தலைமை வகித்தார். அரிமா சங்கம் இஸ்ரேல் முன்னிலை வகித்தார். 
துர்கா தனிப் பயிற்சி கல்லூரி முதல்வர் செந்தில் முருகன் பாரதியார் உருவப் படத்துக்கு மாலை  அணிவித்து  மரியாதை செலுத்தினார். 
எழுத்தாளர் தில்லை ராஜேந்திரன் பாரதியார் கவிதைகளின்  சிறப்புகள் குறித்து பேசினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பாரதி உருவப் படத்துக்கு மலரஞ்சலி  செலுத்தினர். 
ஆசிரியை ஜெயலட்சுமி  நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com