வடலூர் தெய்வ நிலையத்தில் உண்டியல் காணிக்கை ரூ.9.58 லட்சம்

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் உண்டியலை திறந்து எண்ணியதில் ரூ.9.58 லட்சம் காணிக்கை இருந்தது. 

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் உண்டியலை திறந்து எண்ணியதில் ரூ.9.58 லட்சம் காணிக்கை இருந்தது. 
வடலூரில் அருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள உண்டியல் பணம் எண்ணும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை  கடலூர் உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி  முன்னிலையில்  உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரொக்கம் ரூ.9,58,476 மற்றும் வெளிநாட்டு பண தாள்களும் இருந்தன.  இந்தப் பணியின்போது, சரக ஆய்வாளர் பா.ஜெயசித்ரா, வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com