பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கடலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
கடலூர் நகராட்சியில் நிலவும் சுகாதாரச் சீர்க்கேட்டை கண்டிப்பது, புதைச் சாக்கடை திட்டத்தை விரைந்து முழுமையாக நிறைவேற்றுவதோடு, அதில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும், நேதாஜி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நகராட்சிப் பகுதியில் பழுதான தெரு விளக்குகளை எரிய வைக்க வேண்டும், சுத்தமான குடிநீர் வழங்குவதோடு, தூய்மை பராமரிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் சட்டப் பேரவைத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடை
பெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலர் இரா.குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் விஜயராகவன், ஒன்றிய தலைவர் நித்தியானந்தன், பிரசார பிரிவு மாவட்டத் தலைவர் பொன்னி.ரவி, மீனவரணி சரவணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 
பிரசார பிரிவு மாநிலச் செயலர் கோவிந்தராஜ், வழக்குரைஞர் பிரிவு ஆர்.கே.சிவா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  நகர பொதுச் செயலர்கள் விஸ்வநாதன், நடராஜன், வேலாயுதம், அருள், தொழில்பிரிவு இந்திரஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com