வடலூர், மாருதி நகரில் வசிப்பவர் திலகம். இவரது கணவர் வெங்கடாஜலபதி(58) அண்மையில் காலமானார். இவரது கண்களை தானமாக வழங்க குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர் வெங்கடாஜலபதியின் கண்களை தானமாகப் பெற்றுச் சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை வடலூர் அரிமா சங்கத் தலைவர் ஜி.சந்திரகாசு, செயலர் வி.கே.ராமலிங்கம், பொருளாளர் கண்ணன், மாவட்டத் தலைவர் எஸ்.முருகன், வி.சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.