தமிழ்நாடு - புதுச்சேரி மறை மாநில தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின் கடலூர் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் வடலூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநிலப் பொதுச் செயலர் ஆரோக்கியதாஸ் தலைமை வகித்தார். மாநில செயல் தலைவர் டேனியல், பொருளாளர் அந்தோணிராஜ், புதுவை மாநில பொறுப்பாளர் சலேத்தையன், மாநில துணைச் செயலர் அமலோற்பவதாஸ், மாநில துணைத் தலைவர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணைச் செயலர் பெர்னாண்டஸ், இணைச் செயலர் லூர்துசாமி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
மறை மாநில பொருப்பாளர்கள் சென்னை, மயிலை- பாரதி செபாஸ்டின், சகாயம், புதுச்சேரி- அலெக்ஸ், நெப்போலியன், திருச்சி- ஜான்சன்துரை, கும்பகோணம்- வேளாங்கண்ணிராஜ், தஞ்சை- மனோகரன், தருமபுரி- மைக்கேல்ராஜ், சூசை, விழுப்புரம்- சகாயராஜா, நெய்வேலி- கிருபைதாஸ், வின்சென்ட், மார்சலின் வின்சென்ட் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ்நாடு மாநில தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் மேரிஜான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேருரையாற்றினார். கூட்ட அமைப்பாளர்களான வடலூர் பங்குப் பேரவையின் உப தலைவர் அமலநாதன், ஏசுதாஸ், ஆனந்தராயர், ஜெயராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஜான்மோரிஸ் நன்றி கூறினார்.