காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆதித்தன் (எ) மலைப்பெருமாள் (77). நடிகரான இவர், உடல் நலக்குறைவால் கடந்த 12-ஆம் தேதி (வியாழக்கிழமை இரவு) காலமானார்.
இவர், தாய் வீட்டு சீதனம், தாய் மகன், விளக்கேற்றியவள், தனிப்பிறவி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகன், வில்லன் வேடங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஆதித்தன், காரைக்கால் கீழகாசாக்குடியில் மகன் வீட்டில் காலமானார். இவருக்கு மனைவிகள் சந்திரா, பத்மா, 5 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர்.
இறுதிச் சடங்கு காரைக்காலில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்புக்கு - 7373097888.